பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

115


இச்செய்யுளைக் கேட்ட புலவர் பெருமக்களனைவரும் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினர். பிறகு தமிழ்ப் பெருங்கணக்காயனார் தம் மாணாக்கர்களையும் உடன் கொண்டு விடை பெற்றுப் புறம் போயினர். மற்றப்புலவர்களோடு அரசன் சிறிது நேரம் அளவளாவியிருந்தான். பிறகு புலவர் அனைவரும் விடை பெற்றுச் செல்ல, மாலைக் காலம் கழிந்து, இராக்காலம் வந்ததால், நெடுஞ்செழியன் அக்காலத்துக்குரிய கடன்களை நிறைவேற்றி விட்டு நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலுக்கும், உவணச் சேவல் உயர்த்தோன் நியமத்துக்கும் சென்று, இறைவனைத் தரிசித்து வந்து, அரண்மனைக்குட் புகுந்து தனது அந்தரங்க அறையில் பண்டைப் புலவர் அருளிச் செயல்களை ஆராய்ந்து, சிறிது நேரம் இன்புறக் கழித்துவிட்டு வேறு துணை யொன்று மின்றி, இடையாமத்தின் பிறகு வெளியேறி, நாட்டில் மக்கள் பலரும் நன்குவாழும் வாழ்வை ஆராயவும் ஒற்றர் தத்தம்பணியை முறை வழுவாது ஆற்றுவதை அறியவும் முயன்றான்.

“ஒற்றிற் றெரியர் சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று

முறையிடினுங் கேளாமை யன்று."