பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

பாண்டிய மன்னர்

விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா வின்பத் தவருறை நாட்டுக்
குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்,"

பிறவும் விளக்கிக் கூறும் இளங்கோவடிகள், பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோன்மை பிழைத்த செய்தியைத் தெரிவிக்கும்போது, அடையும் வருத்தத்திற்கு எல்லை யுண்டோ? அத்தகைய தவப் பெரியார், சேரர் குடியிற் பிறந்த இளங்கோவேயாயினும், பாண்டியன் நெடுஞ்செழியனது உண்மைப் புகழை உலக மறிய விளக்கிக்கூறியுளர். இறுதியில் அவர் அருளிய வாக்கு இங்கு எடுத்துக் காட்டப்படுவதோடு, இப்பாண்டியன் வரலாறு நிறைவேறும்:

"வடவாரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்குகாணப்
புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன்
அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழி யன்றன் நெடும்புக ழளந்து
வழுத்தலும் அவன்பழி மறையுமா றாய்ந்து
நிலத்தவர் உளங்கொள நிகழ்த்தலும் எளிதோ?”

முற்றிற்று.





The B. N. Press, Mount Road, Madras.