பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பாண்டிய மன்னர்

பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறுமருப்பிற் களிறவர
காப்புடைய கயம்படியினை
அன்ன சீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி யொன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவல் நால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வாருற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு

நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே.”[1]

புலவர் பெருமான் இவ்வாறு மனமுறப் புகழ்ந்து பாடிய பாடலை யேற்றுக்கொண்ட பாண்டியன் பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, அவர்க்குத் தக்கவாறு


  1. புறநானூறு - செய்யுள், 15.