பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


நேரும். அழவும் நேரிடும்.

4. திறமைக் குறைவு

எதையும் முழுதும் கற்றுக் கொள்வது என்பது ஒருவரது அடிப்படை முயற்சியின்பாற்பட்டதாகும், அறிவும் முயற்சியும் பயிற்சியுமே ஒருவரது திறமையைப் பெரிதும் வளர்ப்பனவாகும்.

அரைகுறையாகப் புரிந்துகொள்வதும், தனது சக்திக்கு மீறிய காரியங்களை மிகவும் சிரமப்பட்டு செய்வதும், மிகவும் ஆபத்தானதாகும்.

சாலை விதிகள் தெரியாமல், ஒட்டத் தெரியாமலேயே நடு சாலையில் சைக்கிள் ஒட்டுதல், நீந்தத் தெரியாமலோ அல்லது கொஞ்சம் தெரிந்தோநீச்சல் குளத்தில் நீந்த முயலுதல் எல்லாம் அபாயத்திற்கு அறிகுறிதானே?

பார்வை மந்தம், பசிகளைப்பு சக்தியில்லாமை, போதைப் பொருட்கள் விளைத்த தள்ளாமை, முதுமையில் ஏற்படும் களைப்பு, இளைப்பு, மற்றும் மனக்குழப்பங்கள் எல்லாம் ஒருவரது திறமையைக் குறைவு படுத்துவனவாகும்.

இதுபோன்ற சமயங்களில் மேற்கொள்கின்ற செயல்கள் அனைத்தும் விபத்தினை விளைக்கும் விபரீத நிலைகளாகும்.