பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

15


5. சூழ்நிலை தரும் சிக்கல்கள்

கார் ஒட்டுதல், எந்திரங்களை இயக்குதல் மற்றும் விரைவான இயக்கமுள்ள காரியங்கள் செய்தல் எல்லாம் சிக்கலான சூழ்நிலையாகும். அப்பொழுதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வேலை செய்யத்தொடங்குவதற்குமுன், தான் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

வேலை செய்யும் பொழுது, என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்ற விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

வேலை செய்து முடித்தவுடன், அதற்குண்டான முறைகளுடன் முடிக்க வேண்டும். ஏதேனும் மறந்து விட்டோமா என்பதை நினைவு கூர்ந்து, பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்திரங்களுக்கருகில் இருக்கும் போது பறக்கும் ஆடைகளுடன் இருப்பதோ, பெட்ரோல் இருக்கும் பகுதிகளில் புகைபிடித்துக்கொண்டு நிற்பதோ, தனது கட்டுப் பாட்டுக்கும் மேலாக காரை விரைவாக ஒட்டுவதோ எல்லாம் சூழ்நிலை தரும் சிக்கல்கள்தான்.

கட்டுப்படாத சூழ்நிலையின் காரணமாகத்தான் விபத்துக்கள் உண்டாகின்றன என்பதை நாம் மறக்கவே கூடாது.

மேலும், வேலை செய்யும் நேரத்தில் மனக்