பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதுகாப்புக் கல்வி

35


18. எப்பொழுதும் குதிகால்கள் பெடலில் இருப்பது போல் வைத்துத்தான் மிதிக்க வேண்டும். முன் பாதங்களால், எழும்பி நின்று குதித்து ஒட்டக்கூடாது. அது சமநிலையை (Balance) இழக்கச்செய்து கீழே தள்ளிவிடும்.

19. முழங்கால்களை அகற்றி வைத்துக்கொண்டு ஒட்டாமல், சைக்கிள் குறுக்குக் கம்பிக்கு (Frame) இணையாக வருவது போல முழங்கால்களை வைத்துக் கொண்டு தான் ஓட்ட வேண்டும்.

20. சைக்கிள் ஒட்டும் கைப் பிடியில் (Hand Bar) தோள்கள் உறுதியாக இருக்கும்படியும் முழங்கைகள் விறைப்பாக இருக்கவும் போன்ற அமைப்பில் கைப்பிடி பிடித்தவாறுதான் ஓட்ட வேண்டும்.

21. உடல் நலம் இல்லாமல் இருக்கும்போதோ, அல்லது களைப்பாக அல்லது மனக் குழப்பத்துடன் இருக்கும்போதோ சைக்கிள் ஓட்டக்கூடாது.

22. நன்றாக வயிறார சாப்பிட்ட பிறகும் சைக்கிள் ஓட்டக்கூடாது.

23. சைக்கிளை எங்கேயாவது நிறுத்திவைக்க நேர்ந்தால், கண்ட இடத்தில் நிறுத்திவிட்டுச்செல்லாமல், அதற்கென்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் நிறுத்திச் செல்ல வேண்டும்.

24. இரவில் விளக்குடன்தான் சைக்கிள் ஒட்ட வேண்டும்.

இத்தனை விதிகளையும் பின்பற்றுவதுடன்,