பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுகாப்புக் கல்வி

39


பொது இடங்களில் பெறவேண்டிய பாதுகாப்பு முறைகளையும், அதற்குரிய வழிகளையும் இதுவரை கண்டோம். அதேபோல், நாம் வசிக்கின்ற வீட்டில் பெறவேண்டிய பாதுகாப்பு முறைகள் பல உண்டு. அவற்றின் தன்மைகளையும் இனி காண்போம்.


5. இல்லத்தில் பாதுகாப்பு

1 .இல்லமும் உள்ளமும்.

அவரவர் இல்லம் அவரவர்க்கு அரண்மனை தான். அது, மண் குடிசையோ-மாடமாளிகையோ, எப்படி இருந்தாலும், வாழ்வோருக்கு அதுதானே அனைத்தும்.

ஒய்ந்த நேரத்தில் உட்கார, உண்ண, உறங்க என்று மட்டும் அமையாது, உள்ளத்தின் மறுமளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக, குடும்பம் எனும் குளிர் சோலையை வளர்க்கும் கோயிலாகத்தான் வீடுகள் அமைந்திருக்கின்றன.

'இல்லங்கள் எல்லாம் பத்திரமான இடங்கள்' என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவை அப்படித்தான் இருக்கின்றனவா என்று பார்த்தால், பத்திரிகையில் வரும் அன்றாட செய்திகள், அவ்வாறு இல்லை என்று தானே நமக்குச் சொல்லிக் காட்டுகின்றன.

பத்திரிக்கையிலே பிரசுரமாகும் பயங்கர