42
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
ஒன்றையொன்றைச் செய்யத் தூண்டும் அவசர காலத்தில் தவறு நேர்வதுண்டு. அந்தத் தவறு சிறிதாகவும் இருக்கும். அதுவே விபத்தாக மாறுவதும் உண்டு.
ஆக, அவசரமும் பதட்ட நிலையும், அறியாமையும் அஜாக்ரதையும் தன்னால் முடியும் என்று முடியாத வேலை ஒன்றைச் செய்யும் போதும் உண்டாகின்ற விபத்துக்களே மிகுதியாக இருக்கின்றன.
இத்தகைய நிலைகளில், இல்லங்களில் உண்டாகின்ற விபத்துக்களை விழுதல் (Falls) காயங்கள் (Burns) விஷப் பொருட்கள், (Poisons) என்று பிரித்துக்கொண்டு உண்டாகும் ஆபத்துக்களைப் பற்றி விரிவாகப் புரிந்து கொள்வோம்.
3. விபத்தும் விதங்களும்
1. விழுதல்: வீட்டிலே நடக்கும் விபத்துக்களினால் உண்டாகும் இறப்புக்களில் 3/4 பாகம் விழுவதினால் விளைபவைதான். அவை எப்படி நிகழ்கின்றன என்று இனி காண்போம்.
1. தனக்கு எட்டாத ஒரு பொருளை எடுப்பதற்காக நாற்காலி அல்லது முக்காலி வைத்து ஏறி, சமநிலை இழந்து, தடுமாறி கீழே விழுதல்.
2. ஏணி மேலே ஏறி நின்று எதையாவது எடுக்கும் போது, தவறி நிலைதடுமாறிக் கீழே விழுதல்.
3. மாடிப்படி தெரியாமல் மாற்றுப் படியில் கால்