பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

49


1.விஷப் பொருட்கள்

மனிதர்கள் என்றால் நோய் நொடி வரத்தான் செய்யும்,வீடு என்று இருந்தால், எலி, கொசு, மூட்டைப் பூச்சி போன்றவை தொந்தரவு தருவதற்காகவே வரத்தான் வரும்.

நோய்களைப் போக்க மருந்தையும், எலி, கொசு, முட்டைப்பூச்சி போன்றவற்றை ஒழிக்க விஷ மருந்துகளையும் வாங்கத்தான் வேண்டும்.

இரண்டும் அவசியம் என்றாலும், அதற்காக இரண்டையும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வைக்கத்தான் வேண்டுமா! இதையாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

அல்லது தெரிந்தாலும் அலட்சியமாக ஒதுக்கி விடுவதுதான் ஏனென்று நமக்குப் புரியவில்லை.

தூங்குவதற்குமுன் மருந்து சாப்பிட மறந்துபோய், நடுச்சாமத்தில், தூக்கக் கலக்கத்தில் மருந்து சாப்பிட முயன்று, மருந்துக்குப் பதிலாக விஷப் பொருட்களைத்தின்று விடுகின்றவர்களும், விஷத்தைக் குடித்து விடுகின்றவர்களும் அநேகம் பேர் உண்டு.

தெரியாமல் தூக்க மாத்திரைகளை விழுங்குபவர்கள் அதிகம் உண்டு.

இத்தகைய கொடுமை நிகழாமல், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், தகுந்த ஏற்பாடுகளை கீழ்க்காணும் முறையில் செய்து வைக்கலாம்.

1. மருந்து பொருட்களைத் தனியே வைத்தல்.