பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கூடாது.

மின் விசைத் தாக்குதலும் முதலுதவியும்: மின்விசைத்தாக்குதலுக்கு ஆளான ஒருவரை காப்பாற்ற முயல வேண்டும். எப்படி?

ரப்பர்காலணிகள் அல்லது ரப்பர்கையுறை கொண்டு, அல்லது ரப்பர் பாய் மீது நின்று காக்கலாம், இல்லையேல், மரக்கட்டைகள், காய்ந்த பேப்பர் போர்டு, அல்லது புத்தகம் இவைகள் மீது நின்று, மின் கம்பியை அப்புறப்படுத்தலாம்.

முடிந்தால், அதற்கு முன்னே, மெயினை அணைத்துவிடவும் (off). பாதிக்கப்பட்டவரை, மின் கம்பி தொடர்பிலிருந்து அப்புறப்படுத்திய பிறகு, அவரது துணிகளை நெகிழ்த்தி விடவும்.

சுத்தமான காற்றோட்டமுள்ள இடத்தில் அவரைப்படுக்க வைக்கவும்.

வாயைத் திறந்து, நாக்கு உள்ளே இழுத்துக் கொள்ளாதவாறு, நாக்கை இழுத்து வைக்கவும்.

மூச்சு வரவில்லை என்றால், செயற்கை முறையில் சுவாச முறையை பயன்படுத்தவும்.

அதற்குள்ளே, மருத்துவரை அழைத்துவர ஏற்பாடு செய்யும். முதலுதவி மட்டும் போதும்.

பள்ளி மாணவர்கள் வீடுகளில் பாதுகாப்புடன் வாழ்வதில்தான், அவர்களின் வளமான வருங்காலமே அடங்கியிருக்கிறது. அது, சமுதாயப் பாதுகாப்புக்கே