பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழப் பிறப்பது மட்டுமன்றி, நாம் எவ்விதமாக வாழ்ந்தால் விபத்துகளைத் தவிர்த்து, சுகத்துடன் அநேக நாட்கள் வாழலாம் என்பதையும் கூறுகிறார் ஆசிரியர். அவ்வாறு கூறுவதை, இனிய எளிய தமிழில், யாவரும் விரும்பி படிக்கத்தக்க விதமாய் எழுதி இருக்கிறார். டாக்டர். நவராஜ் செல்லையா, தன் வேலையை திறம்பட செய்வதுடன், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் அனைவரையும் 'நில் - கவனி -நட' என்று சரியான பாதையில் அவர்களை நடத்துவதற்காக உருவாக்கிய இப்புத்தகத்தை, அனைவரும் விரும்பிப் படித்து, வாழ்வில் நிறைவு காண்பார்கள் என்பது நிச்சயம்.

உடற்கல்வி கட்டாயப் பாடத்திட்டமர்க பள்ளிகளில் வந்த இந்த நல்ல நேரத்தில், இந்த நூல் உபயோகமான நூல்கள் எளிய தமிழில் தேவை. இத்தேவையை நிறைவாக்க இன்னும் பல நூல்களை தமிழகத்திற்கு அளிக்க, டாக்டர். நவராஜ் செல்லையா அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.


அரிமா. ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்
பதிப்பாளர்