பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


தொடர்ந்து அவற்றைக் காக்கின்ற தன்மையும் கண்காணிப்பும் வேண்டும்.

8. இடம் அளவில் சிறுத்து, வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால், எல்லோரையும் ஒரேசமயத்தில் விளையாடவிடாமல், இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழு ஆடும்போது, மறு குழுவை வேடிக்கைப் பார்க்க வைத்து, பிறகு அவர்களுக்கும் அடுத்து வாய்ப்பு வருவது போன்று தந்தால், நெருக்கடியும், அதன் காரணமாக விளையும் இன்னலையும் தடுத்தாட் கொள்ளலாம்.

9. முறையான கண்காணிப்பு முறையுடன், பயிற்சியாளர்களின் ஆழ்ந்த ஒத்துழைப்பும் அவசியம் இருக்க வேண்டும்.

10. உள்ளாடும் அரங்கத்தில் நடந்து கொள்ளும் முறையினை எல்லாம், விதிமுறைகளாகத் தொகுத்து, அறிவிப்புப் பலகையில் குறித்து வைத்திருக்க வேண்டும்.

அதில் செய்யத் தகுந்தன, செய்யத் தகாதன என்பவற்றையும் குறித்துக் காட்டலாம்.

11. அரங்கத்திற்குள் வரும் மாணவர்களுக்கு விளையாடி வெற்றிபெறுவது ஒன்றுதான் நோக்கமல்ல என்பதையும் ,விளையாட்டு என்பது மகிழ்வு பெறத்தான். விளையாட்டு என்பது சிறந்த பண்பாட்டை வளர்க்கத்தான். விளையாட்டு மூலம் சிறந்த பாதுகாப்பு உணர்வைப் பெறத்தான் வருகிறோம் என்கிற நல்உணர்வை ஊட்டுவது மிகமிக அவசியமாகும்.