பாதுகாப்புக் கல்வி
63
1.நீச்சலும் நீச்சல் குளமும்
"நீறில்லா நெற்றி பாழ், நெய்யில்லா உண்டி பாழ், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என்று ஒளவைப் பாட்டியார், அழகுபற்றிக் கூறவந்த போது, பாடிச்சென்றிருக்கிறார்.
ஊருக்கு அழகு ஆறு என்றதுபோல, ஏரி, குளம், ஊருணி மற்றும் இயற்கையான நீர்த்தேக்கப் பகுதிகள் கிராமப் புறங்களில் இருந்தன. மக்கள் அவற்றில் நீந்திக் கவிந்து நிதமும் இன்பம் அடைந்தனர்.
"நீச்சல் பயிற்சியானது உடலுக்கும், மற்றும் உடல் உறுப்புக்கள் அனைத்துக்கும் ஆற்றலும் வலிமையும் தருகின்ற சிறந்த பயிற்சி" என்று எல்லோராலுமே ஏகோபித்துப் பாராட்டப்படும் சிறப்பினைப் பெற்றதாகும்.
மேலே குறித்த இயற்கை நீர்த் தேக்கங்கள் இல்லாதபோது, நகரவாழ் மக்கள், செயற்கையான நீர்த் தேக்க முறையை ஏற்படுத்திக்கொண்டு, இந்த நீச்சல் பயிற்சியின் பயன்களையெல்லாம், தாங்களும் பெற முயன்றார்கள். அந்த ஆன்ற முயற்சியின் விளைவால்தான், . நீச்சல் குளங்கள் (Swimming pools) நாடு நகர மெங்கும் தோன்றின.