பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


நீச்சல் குளங்கள் அமைக்கும் முறையில் நிர்மாணித்தவர்கள் மூன்றுவித அமைப்பினில் உருவாக்கினார்கள்.

அமைந்திருக்கும் நீச்சல் குளத்தில், தண்ணீரை நிரப்பி சில நாட்கள் கழிந்த பிறகு, அவற்றை வடித்து நீக்கிவிட்டு, புதிய தண்ணீரை இட்டு நிரப்புவது, இந்த இடைக் காலத்தில், “பாசகம் (Chlorine) என்னும் மருந்தினை இட்டுத் தூய்மைப்படுத்துவார்கள். இதனை நீர் நிரப்பி நீக்கும் நீச்சல் குளம் என்று கூறலாம்.

அடுத்தது, நீச்சல் குளம் அமைந்திருக்கும் முறையில் ஒருபுறம் இருந்து தண்ணீர் வந்து குளத்தில் இருந்து, அந்த நீரோட்டத்துடனேயே வெளியேறிப் போய் விடுகின்ற அமைப்பு. இதில், நீரோட்டம் இருந்து கொண்டே இருப்பதால், என்றும் தண்ணீர் தூய்மையாகவே இருக்கும்.

மூன்றாவது வகை நீச்சல் குளத்தில், தண்ணீர் அதேதான். தூய்மையாக வந்த தண்ணீர், பயன்படுத்தப்பட்ட பிறகு குழாய் மூலம் வெளியே கொண்டு போகப்பட்டு, அங்கே தூய்மையுறச் செய்து, மீண்டும் அதே நீரை சுத்தமாகக் குளத்தில் விடுதல். இது 'நீர் சுற்றோட்ட முறை' என்பதாகும்.

இவ்வாறு அமைக்கப்படுகின்ற நீச்சல் குளங்கள் வெளிப்புற நீச்சல் குளம், உள்ளக நீச்சல் குளம் (Out door and in door Swimming Pool) என இருவகைப்படும்.