பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதுகாப்புக் கல்வி

65


இத்தகைய செயற்கை முறையில் அமைந்த நீச்சல் குளங்களில் ஒழுங்கு முறையுடன் நடந்துகொண்டால் தான் தண்ணீரும் தூய்மையாக விளங்கும். பலருக்கு பல்வேறு விதமான நோய்களும் வராமல் இருக்கும். அத்துடன் விபத்துக்களும் நிகழாமலும் காத்துக் கொள்ள முடியும்.

ஆகவே, நீச்சல் குளங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எந்தெந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இனி காண்போம்.


2. நீந்தும்போது நிகழும் விபத்துக்கள்

1.நீந்தத் தெரியாமலேயே, நீச்சல் குளம் அல்லது ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற பகுதிகளிலும் இறங்கி நீந்த முயலுதல்

2. நீந்தத் தெரிந்தும், ஆழத்திற்குள் போய் சிக்கிக் கொள்ளுதல்.

3. நெடுந்தூரம் தனியே நீந்திப் போய், மீண்டும் கரைக்குத் திரும்பிவர முயலும் போது, இயலாமல் களைத்துப் போய், தண்ணிருள் மூழ்கி விடுதல்.

4. பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்பதற்காக அபாயகரமான நீர்ப் பகுதிகளுக்குத் துணிந்து சென்று, மீளமுடியும் என்று வீரம் பேசி செயல்படுதல்.

5. யாரும் துணையில்லாமல், ஆழ நீர்ப்பகுதியில் நீந்துதல்.