பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதுகாப்புக் கல்வி

67



3. நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்

1.வயிறு நிறைய உண்டுவிட்டு, நீந்தச் செல்லக் கூடாது.

2.உடல் நலிவுற்று அதாவது உடல் நிலை சரியில்லாதபோதும், களைப்பாக இருக்கும்போதும், மனநிலை சரியில்லாத போதும் நீந்தக்கூடாது.

3. தோல்வியாதி உள்ளவர்கள், மற்றும் கண் நோய், சீழ்காது உள்ளவர்கள், சளி பிடித்தவர்கள், சேற்றுப்புண் உள்ளவர்கள், தொற்றுநோய் உள்ளவர்கள் யாரும் நீச்சல் குளத்தில் இறங்கவே கூடாது. (அவர்களை அனுமதிக்கவே கூடாது).

4. வெட்டுப்புண், மற்றும் உடலில் காயம் உடையவர்கள் நீச்சல் குளத்தில் இறங்கக் கூடாது.

5. பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களில், நீச்சல் குளத்தில் நீந்தக் கூடாது.

மேலே கூறிய வகையினர் மட்டும் வரவேண்டாம் என்று கூறியவுடன், வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் காண்போம்.

1. நீச்சல் குளத்திற்கு வருபவர்கள் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வரக்கூடாது தண்ணிர் கெட்டுவிடும் என்பதால், சவுக்காரம் அல்லது சீக்காய் பட்டு முதலில் குளித்த பிறகுதான், குளத்துள் இறங்க வேண்டும்.