பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


2. தண்ணீரில் இருக்கின்ற பொழுது, சிறுநீர், கழிக்கும் உணர்வு தோன்றுவது இயற்கைதான். அதனால், பலர் பயன்படுத்துகின்ற நீச்சல் குளம் பாழாகிப் போய்விடும் என்பதால், நீச்சல் குளத்தில் நுழைந்து, குளிக்குமுன், கழிவறைகளுக்குச் சென்று வந்துவி வேண்டும்.

3. குளித்துவிட்டு நீச்சல் குளம் நோக்கி வரும்போது, வருவதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் நச்சுத்தடை கரைசல் கலந்த நீரின் வழியேதான் நடந்துவர வேண்டும்.

4. தூய்மை தரும் துப்புரவு விதிகளை நீச்சல் குளத்திற்கு வெளியிலிருந்தே கடைபிடித்துவர வேண்டும். நீச்சல் குளத்துள் மட்டுமே ஒழுங்குவிதி இருக்கவேண்டும் என்பதில்லை. உள்ளும் புறமும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது ஒழுங்கு முறைகள்தான்.

5. நீந்தும் ஆசையில் தனது உடைகளை, உடைமைப் பொருட்களை, ஆங்காங்கே வீசி எறிந்து விட்டு வரக்கூடாது. அதற்கென்று உரியவரிடம் சென்று, பொருட்களை பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டுத்தான் வரவேண்டும்.

இனி, நீந்தும் போது மேற்கொள்ள வேண்டிய முறைகளைக் கவனிப்போம்.