பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதுகாப்புக் கல்வி

75


9. நலம் தரும் பாதுகாப்புக்கல்வி

எங்கு நின்றாலும் எப்படி இயங்கினாலும், சுற்றுப்புற சூழ்நிலையினை முதலில் உற்று நோக்கி, அதன் உரிய தன்மையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு நடந்து கொண்டு, பத்திரமாக வீடு வந்து சேர்வதே புத்திசாலித்தனமாகும்.

அறிவு பெறும் பள்ளியில், அஞ்சாத மனமும் ஆற்றல் நிறைந்த உடலும் இருக்கும் போதே, பாதுகாப்பு முறைகளை பழுதறக் கற்றுக்கொண்டால், அவ்வழி களிலே நடப்போம் என்று உறுதி கொண்டால், அவர்கள் வாழ்வெல்லாம் வளமே பொங்கும்.

அத்தகைய அரிய வாய்ப்பினை நல்கும் பாதுகாப்புக் கல்வியானது, பள்ளியிலே, சாலையிலே, இல்லத்திலே, விளையாடும் மைதானத்திலே, நீச்சல் குளத்திலே எவ்வாறெல்லாம் பயன் பெறலாம், நலமுறலாம் என்ற பாங்கினை பதமாக எடுத்துச்சொல்கிறது.

அவசரமான உலகத்தில், ஆத்திரம் நிறைந்த அறிவுணர்ச்சியானது, அல்லல் நிறைந்த பாதையையே காட்டும். அந்த நெறிஞ்சிமுள் வாழ்வு முறையை ஒதுக்கி, நலம் தரும் பாதுகாப்புக் கல்வியைக் கற்று, சுய உணர்வுடன், தான் செய்வது இன்னதென விளங்கிச் செய்து, தனக்கும், அடுத்தவருக்கும், சமூகத்திற்கும்