பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பாபு இராஜேந்திர பிரசாத்

அண்ணா! நமக்குக் குடும்பச்சொத்து கொஞ்சம் உள்ளது. நானும் பணியாற்றினால், நமது வருமானம் கூடும். குடும்பத்தின் தரம் உயரும். இது உண்மைதான் அண்ணா!

நாம் வாழும் மக்கள் சமூகத்தில் பணம் உள்ளவனே பெரிய மனிதன். எல்லாப் பெருமைகளும் அவனைத் தேடிச் சென்று அடையும். பணக்காரன் சமூகத்தில் பெறும் மதிப்பும் மரியாதையும் பண்புள்ள நல்ல குணாளனுக்குக் கிடைக்காது என்பதையும் நான் அறிவேன்.

ஆனால் இந்த உலகம் நிலையற்றது. நீர்மேல் குமிழி போன்றது. தோன்றுவன மறைவன, செல்வம், பதவி, புகழ் பெருமை மற்றபடி எல்லாமே இப்படிப்பட்டதுதான்! ஆசை உருவாவது பணத்தால் தானே தேவை மிகுவதும் அதனால் அல்லவா? தங்கத்தால் இன்பம் பெறலாம் என்று மக்களும் நினைக்கிறார்கள்.

ஆனால், போதுமென்ற மனமே முழு வாழ்க்கை இன்பத்துக்கு அடிப்படை, மகிழ்ச்சி, துன்பம் என்பன எல்லாமே உள்ளத்தைப் பற்றியன. சாதாரண காசு பணங்களை வைத்திருக்கும் ஏழைகள், எத்தனையோ பணக்காரர்களை விடச் சந்தோஷமாக இருப்பதை நாம் பார்க்கவில்லையா அண்ணா! ஆனால் நான் வறுமையை வெறுப்பதாக எண்ண வேண்டாம். நமது முன்னோர்கள் எல்லாருமே ஏறக்குறைய ஏழைகளாகவே வாழ்ந்தவர்களாவர்.

பொருள் இல்லையே என்பதால், ஆரம்பத்தில் அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கலாம். ஆனால், உலகத்தையும், வாழ்க்கையையும் நன்குணர்ந்த ஞானிகள், என்றைக்குமே மனித ஜாதியின் மதிப்புக்கு உரியவர்கள்தான். அவர்களை இகழ்ந்தவர்களே மண்ணோடு இரண்டறக் கலந்து விட்டார்கள்.

நம்மை யார் இகழ்ந்தாலும் அல்லது புகழ்ந்தாலும் அதையெல்லாம் நாம் எண்ணிக் கொண்டே இருக்க வேண்டிய