பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

33

வயோதிக அன்னைக்கோ ஒருபோதும் நான் மனக் கவலையை உண்டாக்க மாட்டேன்.

கோகலேயின் சங்கத்தில் நான் சேர எண்ணிய போது, அதுதான் எனது முடிந்த முடிவாகக் கருதியதில்லை. இன்று வரை நான் தந்தை சொல்லையோ, அவருக்குப் பிறகு தங்கள் வார்த்தையையோ என்றும் மீறி நடந்ததில்லை. கடவுள் சித்தத்தால் இனியும் நான் மீற மாட்டேன். ஏனென்றால் தகப்பனற்ற மகன் என்ற நிலையை, துன்பத்தை, என்றுமே நீங்கள் எனக்கு உருவாக்கியவரல்லர்! எனவே தங்களது மனத்தை நான் புண்படுத்தும் பாவியாக மாட்டேன்.

இனிமேல் தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே நடப்பேன் அதிலே இன்பம் பெறுவேன். தங்கள் தம்பி தங்களது உத்தரவு இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். பிற்கால வாழ்க்கையில் நான் பலவிதத் துன்பங்களை அனுபவிப்பேன் என்று எண்ண வேண்டாம். திடீர் என்று எதன் மீதாவது பற்றுக் கொள்பவன்தானே நான்?

என் வயதுக்கேற்ற புத்தியால் தங்களை வருத்திவிட்டேன்! நீங்கள் என்மீது வைத்திருந்த பற்றை மறந்து விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா! நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் மன்னிக்க!

இனிமேல் தங்களுக்கு மனவருத்தம் உண்டாக்கும் கடிதங்களை எழுத மாட்டேன். மன உளைச்சலை உண்டாக்குவதற்காகவும் நான் அக்கடிதத்தை எழுதவில்லை அண்ணா! அக்கடிதத்தை எழுதிய பிறகு நேரில் நான் தங்களைக் கண்ட பிறகு கண்ணீர் வடித்தேன்; அழுதேன். இன்னும் கண்ணீர் விடுவேன் எதிர்காலத்திலும் அழுது கொண்டே இருப்பேன்.