பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

பாபு இராஜேந்திர பிரசாத்

“நம்மிடம் தவறுக்கள் இருக்கலாம். ஆயினும், நாம் மிக விரைவுடன் முன்னேறியுள்ளோம். பதினைந்து ஆண்டுகளில் சாதித்தவற்றை இப்போது பொறுமைக் குறைவினால் கெடுத்துவிடக் கூடாது. என் நண்பர்களான சோசலிஸ்டுகளுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு உற்சாகம் தரக்கூடிய கொள்கை ஒன்றை வகுத்தால்தான். ஒருவரே ஏகபோகம் கொள்வது அகலும் என்று அவர்கள் கருதுகிறார்கள் சத்தியத்தையும்அகிம்சையையும்விட உயர்ந்த கொள்கை ஒன்று உண்டா? ஒருவரே ஏக போகம் பெறும் வாய்ப்புகளை ஒழிக்க வேண்டும் என்று நாடு தீர்மானித்துள்ளது.

பாவத்தை நீக்க நாம் போராடுகிறோம். வன்முறையைப் பயன்படுத்துவதால் நமக்கே இரு பங்கு தீமை உண்டாகும். பாவிகளை மெல்லத்தான் திருத்த முடியும் என்று தோன்றலாம். என்றாலும், சத்தியப் பாதையே சீரிய பாதையாகும். பிற்கால வரலாற்றில் சிறப்புப் பெறும் வழியும் ஆகும்.

ஏராளமான பணிகள் உள்ளன. போனது போக; இனி நடக்க வேண்டியதை நன்கு கவனிப்போம். மிகவும் பிரம்மாண்டமான வேலைத் திட்டம் வேண்டும் என்பதில்லை. மிகச் சிறிய பணியை ஏற்றாலும் அதனை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். நமக்குள்ள பொறுப்பு ஏராளம். நம்மை ஆளுவோர். தம் அதிகாரத்தைக் கைவிட விரும்பவில்லை. சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க அவர்கள் இன்னும் வலுவாக முயல்வார்கள்...

பரிபூர்ண சுயராஜ்யமே சுதந்திரப் போரின் முடிவாகும். அந்நியர் ஆட்சி தொலைவது மட்டும் சுயராஜ்யம் அன்று. மக்களில் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரைச் சுரண்டுவதும் ஒழிய வேண்டும். அதுதான் முழுமையான சுயராஜ்யம்...