பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

73


முழுமையான சுயராஜ்யம் என்னும் போது யாருக்கும், எந்நாட்டவருக்கும் தீமை நினைத்தில் கிடையாது. நம்மைச்சுரண்டிப் பிழைப்போருக்கும் கேடு விழைவதில்லை. அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட சுயராஜ்யத்தில் அனைவரிடத்திலும் நல்லெண்ணம் கொள்வதே நம் நோக்கம்.

...துன்பம் கண்டு தளர வேண்டாம்; நேர் வழியை விட்டு அகல வேண்டாம். நம் கொள்கைக்கேற்ப நாம் ஒழுகுவோமாக! உறுதி குன்றாமல் உழைப்போமாக. சத்தியாக்கிரகத்தில் தோல்வி என்பதே கிடையாது. சத்தியாக்கிரகம் என்றால் வெற்றி என்பதே பொருள்.

இராஜன் பாபு காந்தியத் தத்துவத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை இச்சொற்பொழிவு விளக்குகின்றது.