பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

75

இடங்களிலே என்ன நடக்கிறது என்பதையே அறிய முடியாத நிலையாகி விட்டது. இவைதானே அடிமைத் தனத்தின் கொடுமைகள்?

இந்திய நாட்டின் சுதந்திரப் போரில் 1930 -ஆம் ஆண்டு முதல் மக்கள் தீவிரமாகப் போராடி வருவதை பிரிட்டிஷ் ஆட்சியினரால் அலட்சியப்படுத்தவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. ஆனால், ஏதாவது சில சீர்திருத்தங்களை வழங்கி, பாரத மக்களை மகிழ்விக்க எண்ணியது அரசு!

1935 ஆம் ஆண்டிலே வெள்ளையராட்சி இந்தியருக்கு மாகாண சுயாட்சி அளித்தது. சுயாட்சி என்றால் என்ன? கவர்னருக்கும் வைசியராயிக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய ஆட்சிக்கு மாகாண சுயாட்சி என்று பெயர். அரசியல் திருத்தச் சட்டம் என்று பேசுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான் என்றுணர்ந்த காங்கிரஸ் சபை, அதை ஏற்றுக் கொள்ள அறவே விரும்பவில்லை.

அப்படியானால், காங்கிரஸ் கட்சியின் கருத்து என்ன என்வதை உலகமும், அரசாங்கமும் அறிய வேண்டுமல்லவா? ஆனால், மாகாண சட்டசபைகளின் தேர்தல்களில் போட்டியிட்டுக் காங்கிரஸ் கட்சி எட்டு மாகாணங்களில் வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்தது.

பீகார் மாகாணத்தில் அமைந்த அமைச்சரவைக்கு ராஜன் பாபுவை முதல் மந்திரியாக இருக்கும்படி அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக அதை மறுத்து விட்டார். எனக்குப் பதிலாக எனது நண்பர்களே மந்திரிப் பதவிகளை ஏற்பார்கள் என்று கூறினார். காரணம் என்ன? பதவிகளை விடக் கட்சித் தொண்டே முக்கியமானது என்றார். இவ்வாறு அவர் கூறியது பாபுவின் பெருமைக்குமேலும் பெருமை தந்தது. அதனால், அமைச்சர் அவையைக் கண்காணிக்கும் குழுவிற்கு பாபு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.