பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

79


ஆனால், பாகிஸ்தான் பிரிவினை என்பது கொடுமையானது தான், ‘எனது பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் நாடு பிரிய வேண்டும்’ என்று மகாத்மாக காந்தி கூறுமளவுக்குத் தீமையானதுதான். என்றாலும் பிரிட்டிஷ்காரனிடம் அடிமை வாழ்க்கை வாழ்வதை விட, நாடு பிரிவினையே மேலானது என்று அந்த நேரத்துக்கேற்றவாறு காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

இவ்வாறு அரும்பாடுபட்டுப் பெற்ற பாரத நாட்டிற்குத் தான் முதல் தலைவராக, முதல் ஜனாதிபதியாக பாபு இராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.