பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

165

கருவிகள் மூலம், இக் கோளாறை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இணைப்புக் குழாய் திறந்திருப்பதால் தான் கோளாறு என்பதை உறுதி செய்து கொண்டால், அறுவை சிகிச்சை மூலம், அக் குழாயை மூடிக் குணப்படுத்தி விடலாம்.

ஒட்டைகள் : இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. அவை மேலே இரண்டு அறைகளாகவும், கீழே இரண்டு அறைகளாகவும் பிரிக்கப்பட்டு உள்ளன. இதயம் சுருங்கி விரியும் போது, கீழ் அறையிலிருந்து தான் உடல் முழுவதுக்கும் ரத்தம் அனுப்பப்படுகிறது. இதனால் கீழ் அறையில், ஓட்டைகள் இருந்தால், ஆபத்து அதிகம். மேல் அறையில் ஓட்டை இருந்தால் அதிக ஆபத்து இல்லாவிட்டாலும், அறுவை சிகிச்சை அவசியம். அறுவை சிகிச்சை செய்து ஓட்டையை அடைக்க வேண்டும்.

சில குழந்தைகளுக்கு நுரையீரலுக்கு அசுத்த ரத்தம் வரும் குழாயோ, அல்லது இதயத்திலிருந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் வால்வுகளோ சுருங்கி இருக்கும். நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் வால்வு சுருங்கியிருந்தால், தேவையான ரத்தம் செல்லாத நிலை ஏற்படும். இதனால் குழந்தை அழ ஆரம்பிக்கும்போது நீல நிறமாக மாறும். குழந்தை பிறந்து இக் கோளாறு இருந்தால், ஒரு மாதத்துக்குள் இதுபோன்ற நிலை ஏற்படும். வால்வை விரிவுபடுத்த, உடடினடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்.

ரத்தத்தை உடல் முழுவதுக்கும் எடுத்துச் செல்லும் ‘அயோட்டா’ குழாயின் வால்வு சுருங்கியிருந்தால், இதயத் தசைகள் பெரிதாகிவிடும். இந்த வால்வையும் அறுவை சிகிச்சை மூலம் விரிவுபடுத்திக் குணப்படுத்தலாம்.

செயற்கை வால்வு : பிறந்த பிறகு, ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளுக்கு நோய்கள் வரும்போது, பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கவனக்