பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டிருந்த பிரசித்த எழுத்தாளர் எஸ். வி. வி. தமிழில் நகைச் சுவைக் கட்டுரை களும் நாவல்களும் எழுதினர். அவருடைய உரைநடை ஒரு ரகமாக விளங்கியது. தி. ஜ. ர. பொழுது போக்கு’ என்ற தலைப்பில் பல விஷயங்களைப் பற்றியும் லேட்டர் வெயினில் நிறைகவே எழுதியிருக்கிருர், சிறுகதைகளும் எழுதினர். அவருடைய வசனநடை குறிப்பிடத்தக்கதாகும். இப்படி அரசியல், சமூகம், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பலவகை விஷயங்களையும் எடுத் தாண்டவர்கள் அநேகர். உரைநடை பற்றிய முறையான வரலாற்றில் இடம் பெறவேண்டியவர்கள் அவர்கள்.