பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பாரதிதாசன்


பெண் குழந்தை தாலாட்டு:

மொய்த்திருக்கும் உன்சமூகம் முப்பத்து முக்கோடி
வங்கத்து வீரருன்றன் வாழ்க்கையிலே சம்பந்தி
தேசத்துருக்கரெலாம் தேவியுன்றன் அண்ணன்மார்
மீசைத் தெலுங்கர்களும் வில்லர்களும் மைத்துனர்கள்
அமிழ்தக் கவிகள் அம்புவிக்குச் சொல்லிவைத்த
தமிழ்நாட்டு வீரரெலாம் சண்பகமே, சொந்தத்தார்.
நாட்டுக்கு நூலிழைக்கும் நங்கையருன் அக்கையர்கள்
வீட்டில் துணிநெய்யும் வீரருன்றன் அம்மான்கள்
கன்னியா குமரிமுதல் கங்கை இமயம்வரைக்கும்
உன்னிரத்தம் சேர்ந்த உடம்புடையார் பாரதத்தார்....

'தொண்டர் படைப்பாட்டு' என்னும் நூல் மூன்றணா விலையில் கருத்து விளக்கப் படங்களோடு "தாய்நாடு, தொண்டரின் எழுச்சி, தொண்டரைக் கூட்டுதல், வீரன் தோள், வீரத் தமிழர், மிதவாதியை எழுப்பல்" என்ற பலவகைப் பாடல்களைக் கொண்டது. இந்நூல் இப்போது கிடைப்பதில்லை. அதில் ஒரு பகுதி:

சேர்வீர் தொண்டர்படைக் கெல்லோரும்-அரைநொடியில்
பாரீர் நமக்குவந்த கேடு-பொறுக்கவில்லை
வாரீர் இதனை அடியோடு-கல்ல எம்மோடு
இன்பம் பொலிந்த திருநாட்டை-நவமணிகள்
ஈன்றோர் குவித்துவைத்த வீட்டை-மறவர் குலம்
என்றும் மலிந்திருக்கும்-இணையுலகில்
இல்லாவிதம் கிடைத்த தேட்டைப் பிறர் தளைந்த
வன்மை விலங்ககலப் பூட்டை-உடைத்துக் காட்டச்
(சேர்வீர்)

கண்ணன் வழிப்பிறந்த சாதி-நமக்கருந்த
கஞ்சியற்று வயிற்றிற் பாதி-பிணிவகைகள்
நண்ணி வருத்துவதுமீதி-அடிமையென
நம்மைப்பிடித்திட்ட வியாதி-தொலைந்ததென்று
விண்ணும் அதிர்சங்கையூதிப்-பராக்கென்றோதி
(சேர்வீர்)