பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பாரதிதாசன்


முழு நிலவை வானத்தில் காணும் போதும் இதே போன்ற கற்பனை கவிஞர் நெஞ்சில் தோன்றுகிறது. "நாள்தோறும் கூழுண்ணும் பாட்டாளி பசியோடு கூழைத்தேடும்போது எதிர் பாராமல் பானையார அரிசிச் சோறு இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை முழு நிலவே உனைக் காணும் போது நானடைகிறேன்" என்று பாடுகிறார் பாரதிதாசன். ஏழைக்கு வெண்சோறு கிடைப்பது எவ்வளவு அரிய செயல் என்பதைக் கவிஞர் இப்பாட்டின் மூலம் புலப்படுத்துகிறார்:

உனைக்காணும் போதினிலே என்னுள் ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவதில்லை
நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிது கூழ் தேடுங்கால், பானை யாரக்
கனத்திருந்த வெண்சோறு காணுமின்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பந்தானோ!

"விடுதலை" என்ற பாடலில் பாரதி கூறும் கருத்து குறிப்பிடத் தக்கது. நாட்டுக்கு விடுதலை கிடைத்தால் எல்லாவித நலன்களும் தாமாக வந்து சேரும் என்று நம்பினார் பாரதி.

ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனுமில்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதர் என்பர்
இந்தியாவில் இல்லையே
வாழிகல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
கசமானமாக வாழ்வமே!

என்று விடுதலைக்குப் பின் பெறக் கூடிய சிறப்புக்களை ஆடியும் பள்ளுப் பாடியும் குறிப்பிட்டார்.

ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞன் கண்ட கனவு பொற்காலம்(Golden Age) என்பது ஷெல்லிதாசனான பாரதியார்