பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. இசைத் தமிழ்! நாற்காலி மேசை விளக்கேற்றி மீதில் அமர்ந்தேநான். ஆசைத் தமிழ்படித்தேன் அம்மா அருகில்வந்தார். மீசைத் தமிழ்மன்னர் தம்பகையை வென்ற வரலாற்றை, ஓசை யுடன்படித்தேன். அன்னைமகிழ் வுற்றதை என்னசொல்வேன்! செந்தமிழ் நாட்டினிலே வாழ்கின்ற சேயிழை யார்எவரும், வந்த விருந்தோம்பும் வழக்கத்தை வாய்விட்டுச் சொல்லுகையில், அந்தத் தமிழ் அன்னையின் முகத்தினில் அன்பு பெருகியதை, - என்னருமை 1 எந்த வகைஉரைப்பேன்! - கேட்டபின்பும் இன்னும்சொல் என்றுரைத்தார்! கிட்ட நெருங்கிஎனைப் பிள்ளாய் என்று கெஞ்சி நறுந்தேனைச் கட்டிக் கரும்பான காதினிற் கேட்டவுடன், - சொட்டு வதைப்போலே சொல்லொரு பாடல் என்றார். இசைத்தமிழ் - வாய்திறந்து எட்டுவகைச் செல்வமும் தாம்பெற்றார் என்னைச் சுமந்துபெற்றார்!