பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பாரதிதாசன்


ஞானநெறி மண்டலத்தில் தெறிந்துயச்சீர் வாசகத்தைப் பொழிந்தவனோ.

காந்தி தாலாட்டு

(காரைக்குடி ராய, சொக்கலிங்கனாரைத் தமிழுலகம் நன்கு அறியும். சீர்திருத்த இயக்கங்கள், சுதந்திரப் போராட்டம், தமிழ் வளர்ச்சி இயக்கங்கள் அனைத்திரும் அவர் முன்னிணியில் நின்றவர். காந்தியத்தில் தோய்ந்த பழந் தொண்டர். அவர் பாடிய இரு தாலாட்டுக்களிலும் புதுயுக மணம் கமழும்.)

பெண்பால் :

காந்தி அறமதனைக் காசினியெலாம் பரப்பப்
போந்த இளங்குடியே பொன்னேநீ கண்வளராய்.

பெண்ணடிமை யென்றுசொலும் பேதைமட
வார்த்தங்கள்
கண்திறக்க வந்தெபெரும் கற்பகமே கண்வளராய்.

சாதியில் உயர்விழிவு சாதிக்கும் வன்கண்ணர்
பேதையார் என்றறியப் பெண்ணரசே கண்வளராய்.

முதுமை எழிலோடு முபதுலகும் போற்றவளர்
புதுமை கலந்த உயர் பெண்ணரசி நீதானோ.

பீடு பிறங்கஅரும் பெண்மைசிறந் தோங்கிமிக
நாடு செழிக்கவந்த நல்லியலாள் நீதானோ.