பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பாரதிதாசன்


போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக்
கொண்டுவந்த
ஆதிமந்தி கற்புக் கரசியவள்
நீதானோ?

செல்வத் தமிழ்வேந்தர் போற்றும்
செழுந்தமிழாம்
கல்விக் கரசி கலைச்செல்வி
ஔவை

இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக்
காக்க
நினைந்துவந்தாள் என்னிலவள் நீதானோ
என்கிளியே?

இனியு நற்காக்கை தமிழ்காத்தே இந்நாட்டைக்
காக்க
நினைந்துவந்தாள் என்னிலவள் நீதானோ
என்கிளியே?

நாட்டு மறவர்குடி நங்கையரைச்
செந்தமிழின்
பாட்டால் அமிழ்தொக்கப் பாடிடுவாள்
நற்காக்கை

பாடினியாம் நச்செள்ளை, பார்புகழும்
மூதாட்டி
தேடிவந்தாள் என்றுரைத்தால் செல்வமே
நீதானோ?