28 பாரதிதாசன் பரம்பரை
தோழர் சாமி பழனியப்பன் இலங்கை வீர கேசரி'யில் துணையாசிரியராய்ப் பணியாற்றுகிறார். தமக்கு முறையெனப்பட்டதைத் துணிவுடன் கூறும் ஆற்றல் அவர்தம் சிறப்பு. புதுப்பட்டி அவர்தம் சொந்த ஊர். அமைதி கொள்வாய்” என்ற பாடல் அவர் இயற்றியது.
-ஆசிரியர்
அமைதி கொள்வாய்
அலைகடலே! இவ்வுலகின் பெரும்பகுதி தன்னை
ஆளுகிறோ மென்கின்ற ஆணவத்தி னாலா கிலைகெட்டுச் சினக்கின்றாய்? உன்னா லிங்த
ணிேலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா? அலைகளை அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,
அன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக, கிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ
கினைக்கின்றாய்! மறந்துவிடு அமைதி கொள்வாய்!
வறுமைமிகு தொழிலாள ருணர்வு பெற்று,
வஞ்சகளின் கெஞ்சுகளில் வாள்பு குத்தப் புறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும்
பொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில் இறக்துவிடு கின்றனையே! புறப்பட் டோரின்
இறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்! மறந்துவிடு தொழிலாளர் புரட்சி தன்னை
மாய்க்கவொனா திவ்வையம்! அமைதி கொள்வாய்!