இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாரதிதாசன் பரம்பரை
பெண்ணென்று சொல்லுவதா? என்ற இப் பாடலை இயற்றிய திரு. அண. இராமநாதன் வேருப்பட்டியைச் சேர்ந்தவர். தமிழுணர்வு அவர்
தம் தலையாய படைப்பு.
-ஆசிரியர்
பெண்ணென்று சொல்லுவதா?
மங்கையின் புன்முறுவல்-காட்டி
மயக்கும் முல்லைக்கொடி-அவள் கொவ்வையின் பேரெழிலை-மொட்டாய்க்
குவித்துக் காட்டுகின்றாய்!-அவள் தங்கிடா இடைபோல-வாடித்
தவித்துத் துடிக்கின்றாய்!-அவள் பொங்கொளி மேனியைப்போல்-தளிர்
பூத்துக் குலுங்கு கின்றாய்!
மரத்தைப் படர்கின்றாய்!-அவள்
மைக்தனைப் படர்கின்றாள்-மிக உரத்தைப் பெற்றுவிட்டால்-வெடித்(து)
உப்பிச் சிரிக்கின்றனைl-அன்பின் தரத்தைப் பெற்றுவிட்டால்-அவள்
தானும் சிரிக்கின்றாள்!-அசை சிரத்தில் மலர்கின்றாய்!-அவள்
சிங்தையில் மலர்கின்றாள்!