பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக்கவிஞர் சுரதா 53

ரங்க துரை வேலன் பர்மாவில் பிறந்த தமிழர். அரசாங்கப் பணியாற்றும் இவர் தமிழில் அளவு கடந்த ஆர்வமுடையவர். பல ஏடுகளிலே இவர். பாடல்கள் வெளிவந்துள்ளன.

-ஆசிரியர்

கவலை இல்லை

ஆணழகே உமதினிய முடங்கல் கண்டே

ஆடிற்றாம் என்றுள்ளம் அன்பால் நீங்கள் பேணுகின்ற கற்காதல் இலக்கி யத்தைப்

பெய்திருப்பீர் என்றெண்ணிப் பிரிந்தேன். ஆனால் கோணலுற்ற சமூகமெனும் குள்ள வாத்தின்

கூவலினை முடங்கலிலே காட்டி விட்டீர்! நாணிற்றாம் என்னுள்ளம்! நமது கட்பை

நாடேற்க வில்லை.எனில் கவலை யில்லை!

காதலினை ஈருயிரிள் இணைப்பு தன்னைக்

கட்டாரி யால்வெட்டத் துணிந்து விட்டார். சாதல்எனும் கிலைவரினும் அஞ்ச மாட்டோம் சாவதிலும் காதலராய்ச் சாவோம் என்று சோதனைக்கு விடநினைத்தீர் உலகில் காதல் தோற்றதனால் உயிர்விட்ட காதல் வீரர் காதைபல கோடிகண்டும் கருணை காட்டாக்

கல்கெஞ்சர் மனம்பற்றிக் கவலை யில்லை!