பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா - 63

தோழர் பெ. காகப்பன் அரிமழத்தைச் சேர்ந்தவர். பாரதிதாசன் ரம்பரையில் ஒருவராக வேண்டுமென்பதில் அவருக்குப் பெரும் ஆர்வம் உண்டு. தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களைப் பற்றி அவர் எழுதிய பாடல் இது. அவர்தம் ஆர்வத்தின் விளைவு.

-ஆசிரியர்

திரு. வி. க.

கண்டொத்த இலக்கியங்கள்

கணிதமிழில் தந்துள்ளார்;

பண்பட்ட உளமுடையார்!

பார்ப்பதற்கு மிகஎளிப்ார்!

கருதியதைச் செயலாக்கிக்

காட்டிடவே என்றென்றும்

உருவாக்கும் உளமுடையார்

உறுதிசெர்ல்லி எதனையுமே!

உண்ணும் உணவினிலும்

உயர்நூல்கள் தந்தவரை

எண்ணும் பொழுதெல்லாம்.

இதயமெலாம் மகிழுதடா!