பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 71

மழைவருமா? என்றேங்கும் உழவ னைப்போல்

மரத்தடியில் அவள்வரவிற் கேங்கும் போது பழிகாரக் கருங்றத்துப் பாம்பொன் றெந்தன்

பக்கத்தில் வந்ததெனப் பயந்து பார்த்தேன்; எழிலணங்கின் கார்போன்ற கூந்த லுக்கே

என்தோள்கள் இருப்பிடமாய் இருக்கக் கண்டு விழிகளை நான் திறந்திட்டேன்; என்ன கண்டேன்!

வீட்டினு ளே படுத்திருந்த நிலைமை கண்டேன்!

-மு. ரெங்கநாத ன்

இதழ் : பொன்னி, 25.12.1948

மலர்-2

இதழ்-17