86
பாரதிதாசன் பரம்பரை
தோழர் ப. முத்துச்சாமி பாரதிதாசன் பரம் பரையினர். பாரதிதாசன் மரு.கரான வித்துவான் கண்ணப்பரிடம் தமிழ் கற்ற சிறப்புடையவர். செவந்தி காளையம் புதுார் அவர்தம சொந்த §§§ {T,
-ஆசிரியர்
கலை மடந்தை
கெஞ்சத்தில் குளிர்வைப் பாள்; இருட்டொ ழிக்கும்
நிலவாகிப் பாய்ந்திடுவாள்; யாழ் ரம்பில் சஞ்சரிக்கும் இசையாவாள்; எழுத்தி டையே
தாரகையாய் ஒளிவிடுவாள்; புதுமைத் தேவி கஞ்சமலர் முகமலர்த்தி ஆடும் பெண் டிர்
கண்வழியே கெளிந்திடுவாள்; எண்ணம் செய்யும் விஞ்சையதாம் கற்பனையில் மூழ்கி, மூழ்கி
விளையாடும் கலைமடங்தை அவள்தான் கண்டீர்!
ஓவியத்தில் உயிர்வரியாய் மின்ன லிட்டே.
உளிமுனையில் சதிராடிச் சிற்பம் செய்வாள். ஆவியினில் அணு அணுவாய் இன்பம் ஊற்றும்
அதிசயத்துக் காதலாகிச் சிரித்து நிற்பாள் பூவினிலே கொழித்திருக்கும் மணத்தைப் போலப்
புத்திளமை கலையாத புன்ன கையாய்த் தாவிடுவான் பெண்உதட்டில், அறிவ ரங்கின்
தமிழ்க்குரலாம் கலைமடங்தை அவள்தான் கண்டீர்!