பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 95.

இளைஞர் வே. சண்முகம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். தமிழழகன் என்ற பெயரில் பாடல்கள் எழுதி வருகிறார். தமிழ் ஆர்வமுடைய இவர் வித்துவான் படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறார்.

இடி மன்னல் அவர் இயற்றியது.

-ஆசிரியர்

இடி மின்னல்

விண்னெலாம் கறுப்பின் வெள்ளம்!

வீரகெஞ் சத்தே ஆக்க எண்ணங்கள் சுழல்வ தைப்போல்

எங்குமே மேகப் பின்னல்! எண்ணத்தில் புதுமை போல

இடையிடை மின்னல் கீற்று வண்ணமாய் நெளிவ தோ,கண்

வாங்கிடும் எழிற்சி ரிப்பே'

ஆர்த்தன இடிமு ழக்கம்,

அழிப்பேன் இச் சமுதா யத்தில் வேர்க்கொளும் இடரை என்னும்

வீரனின் குரலைப் போலே! வேர்த்தனள் இயற்கை யன்னை

விசிடும் புயலின் வேகம் சேர்த்ததாம் ஆர வாரம்

செடிமரம் வீழ்ந்த வம்மா!