பக்கம்:பாரதித் தமிழ்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

சமாளிக்க முடியவில்லை. ஆதலால் 32 பக்கங்கள் கொண்ட அச்சுப் பத்திரிகையாக நடத்துவதென்று தீர்மானித்தோம்.

அந்தப் பத்திரிகை இரண்டாவது மாதத்திலேயே 64 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்தது. நூல் வடிவிலே வெளிவராத பாரதியாரது கட்டுரைகளை அதில் வெளியிடுவதென்றும், பிறகு நூலாகத் தொகுத்து வெளியிடுவதென்றும் நான் தீர்மானித்தேன்.

சுதேசமித்திரன் பழைய பிரதிகளின் தொகுதிகளுள்ள அறைக்குள்ளே மறைந்து கிடந்த பாரதியாரோடு நான் ஆர்வத்தோடு பல நாட்கள், மாதங்கள் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

பதினாறு ஆண்டுகளில் வெளியான தினசரிப் பத்திரிகை, வாரம் மும்முறைப் பத்திரிகை இவற்றின் தாள்களை ஒவ்வொன்றாகப் பரிசோதித்துப் பாரதியாரின் கட்டுரைகளையெல்லாம் திரட்டிப் பிரதி எடுப்பது எளிதான காரியமா? ஆனால் அது எனக்குக் கடினமான வேலையாகத் தோன்றவில்லை எதிரிலே ஒரு பத்துப் பழந் தொகுதிகளை அடுக்கி மேஜையாக்கிக் கொண்டேன். வைத்து அவற்றையே அவற்றின் ஒரு பக்கத்திலே உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கினேன்.

இப்படிப் பிரதி செய்யும் பணியில் எனது நண்பர்கள் திரு.கே. எஸ்.ப பெரியசாமியும் டாக்டர் ல. கி. முத்துசாமியும் எனக்குப் பலநாள் உதவி செய்தார்கள். அவர்களுக்கும் பாரதிப் பைத்தியம் உண்டு. எங்களுடைய தோழமையிலேயே அது வளர்ந்ததாகையால் இந்தக் காரியத்தை உற்சாகமாகச் செய்தோம், பழம் பிரதிகள் நிறைந்த அறைக்கு ஒரு தனிப்பட்ட வாசனையுண்டு. அது எங்களுக்கு நறுமணமாக இருந்தது.

பாரதியார் கவிதை, கட்டுரை, கதை ஒவ்வொன்றையும் எழுதி வெளியிட்ட தேதி அவர் உபயோகித்த புனைபெயர்கள் முதலிய எல்லா விவரங்களையும் விடாமல் குறிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை.

பாரதியார் முதலில் மிஸ்டர் C. சுப்பிரமணிய பாரதி என்று தம் பெயரை வெளியிட்டிருக்கிறார். பின்னால் காளிதாஸன், சக்திதாஸன் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தமது உண்மைப் பெயரிலேயே எழுதும்போது ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/10&oldid=1540057" இலிருந்து மீள்விக்கப்பட்டது