பக்கம்:பாரதியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டுமே சுருங்கிப்போய் இருந்த பாரதிக்கு எவ்விதத் தளமும் இல்லாத நிலையில்தான் அவரிடத்தில் கெட்டிதட்டிப் போயிருக் கின்ற இந்து சமய மீட்சிவாதம் தலையெடுக்கிறது. பகைவனையும் தன்னையும் சமப்படுத்திக் காணும் அத்துவதைக் கோட்பாடு உறுதியாகிறது. இதன் இறுதி நிலையாகக் காந்தீயத்தைக்கூடத் துக்கிப்பிடித்து வாழ்க நீ எம்மான்' என்று வாழ்த்தவேண்டி வருகின்றது. ஆயின் இந்த இறுதிக் கட்ட நிலை பாட்டை ஆராய இது ஏற்ற இடமன்று. இக்கட்டுரையில் பாரதி குறித்த சில செய்திகளைக் கூறியமைக்கு திரு.ரா.அ.பத்மநாபன் அவர்களுக்கு என் நன்றி. 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/131&oldid=817099" இலிருந்து மீள்விக்கப்பட்டது