பக்கம்:பாரதியம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலாம்பரிகள் நெருடிய விழிகளின் ஊமை இமைகளை வருடித் திறந்த ஒளிப் பூபாளம். அடி வயிற்றுக் கனல் ஊதிய ஜ்வாலை பெருமூச்சுக்களில் பிறப்பெடுத்த புயல் உப்பு வியர்வையை அடி உரமாக்கிய கண்ணிர்ப் பாசனக் கழனியைக் கீறி வீரிய விதை தெளித்து பண்டிதக் களை பறித்த முதல் ஏர் யாத்திரை வெள்ளிப் பனிமலை ஏறிக் கடந்து தாமிர பர்ணித் தமிழ்க் குடம் சுமந்து புதிய ருசியாவின் பூகம்ப ஊழிக்கு காலம் நிகழ்த்திய கவிதைக் கும்பாபிஷேகம் சர்வ தேசியம் தளும்பித் ததும்பிய எழுது கோல் முனையில் பூமிப்பந்தைச் சுழற்றிப் பார்த்த சூரிய காந்தம்

151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/151&oldid=817121" இலிருந்து மீள்விக்கப்பட்டது