பக்கம்:பாரதியம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகாரமில்லாத உயிரின் தேடல் வக்கிர மறியாத ஆன்மாவின் அலைச்சல்! அவனது குயில் வருங்காலக் காதலர்க்கு அவன் எழுதி வைத்துப் போன உயில்! அவன் தாகித்த சுதந்தரம் சிட்டுக் குருவியின் சிறகில் காற்றின் உல்லாசச் சுழிப்பில் தட்டுப் படுகிற தட்டுப் பாடில்லாத முழு சுதந்தரம் மூளிச் சுதந்தரமல்ல

அவன் கவிதை அழகு பார்த்துக் கொண்டது மக்கள் முகங்களில் பூச்சூடிக் கொண்டது உச்சரிக்கும் இதழ்களில் அபிநயம் பிடித்தது ஆத்மாவின் மேடையில் அவனுக்குஅஸ்தமனமாவது? மரணமாவது? வாழ்கிறான் அவன் 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/155&oldid=817125" இலிருந்து மீள்விக்கப்பட்டது