பக்கம்:பாரதியம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்து உலுக்கியபோது பசியோடு வெளியில் விழுந்தவர்கள். அதே இடத்தில் அதே நிமிடத்தில் அதே பசியோடு எழுந்து நின்றுகொண்டு அவர்களையே விழுங்கத் தீர்மானம் செய்துவிட்டார்கள். அண்டசராசரத்தின் விளிம்புவரை மோதி அனலடிக்கும் தர்மத்தி அவர்களைத் தேடியவாறு தாவி அலைகிறது! இந்தியாவில்-இப்போது ஏகாதிபத்திய வாதிகளுக்கு அனாதை ஆசிரமத்தில் கூட இடம் கிடைக்காது! இந்தியா முழுவதும் உள்ள இந்தியர்கள் இனி உன்னை வணங்குவார்கள். இந்தியர்கள் மட்டுமா? அதோ இமயமலைகூட உனது காலடியில் தனது சிகரங்களைவைத்து உனக்கு வணக்கம் செலுத்துகிறது! 159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/159&oldid=817129" இலிருந்து மீள்விக்கப்பட்டது