இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிடித்து உலுக்கியபோது பசியோடு வெளியில் விழுந்தவர்கள். அதே இடத்தில் அதே நிமிடத்தில் அதே பசியோடு எழுந்து நின்றுகொண்டு அவர்களையே விழுங்கத் தீர்மானம் செய்துவிட்டார்கள். அண்டசராசரத்தின் விளிம்புவரை மோதி அனலடிக்கும் தர்மத்தி அவர்களைத் தேடியவாறு தாவி அலைகிறது! இந்தியாவில்-இப்போது ஏகாதிபத்திய வாதிகளுக்கு அனாதை ஆசிரமத்தில் கூட இடம் கிடைக்காது! இந்தியா முழுவதும் உள்ள இந்தியர்கள் இனி உன்னை வணங்குவார்கள். இந்தியர்கள் மட்டுமா? அதோ இமயமலைகூட உனது காலடியில் தனது சிகரங்களைவைத்து உனக்கு வணக்கம் செலுத்துகிறது! 159