பக்கம்:பாரதியம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருகிறோம்! o

சுதந்திரத்தை அடைகாத்த கவிப் பறவையே! குஞ்சு பொரித்தபோது நீ இல்லாமல் போனாய்! நாங்கள் அதைக் கூடையில் போட்டு மூடி வைத்திருக்கிறோம்! காலத்தை வென்றவன் நீ. நாங்களும் காலத்தை வென்றவர்கள்! இறந்த காலத்தை நிகழ்வில் தள்ளி வருங்காலத்துக்குக் கதவடைத்து நிகழ் காலத்தின் கழுத்தை நெரிக்கும் சித்துக்களில் வல்லவர்கள்! காலத்தைப் பின்னுக்குத் திருப்பும் கால இயந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள்! இறந்ததை நிகழ்வாய்ச் செய்ய உன்னால் முடியுமா? 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/160&oldid=817131" இலிருந்து மீள்விக்கப்பட்டது