பக்கம்:பாரதியம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்துப்போன கரிகால்சோழனை நெடுஞ்செழியனை சேரனை... நடமாடவிட்ட மந்திரவாதிகள். பிணங்களுக்கு உயிரூட்டி பிரம்மாண்டமாய் நடைபோடச்செய்த டாக்டர் ஃபிராங்கன்ஸ்டீன்கள்! தமிழகத்தை, மம்மிகளைக் காவல் காக்கும் பிரமிட்டாக மாற்றி மகிழ்ந்தவர்கள்...

மூடப்பழக்கமெனும் மூடிய இருளைச் சுட்டெரிக்கவந்த செங்கதிரே! அனைத்தின் மீதும் சுவடு பதித்த யுகப் புலவனே! சுவர்க்கம் உன் விரல் நுனியில் இருந்தது அன்று. தூரம் உனக்கு சமீபமாயிற்று. கிருதயுகம் உன் வழியில் காத்திருந்தது. பிரபஞ்சமே உன் விழியில் ஒளிர்ந்தது. 161.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/161&oldid=817132" இலிருந்து மீள்விக்கப்பட்டது