பக்கம்:பாரதியம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னுடைய சொல் புதிது; பொருள் புதிது தமிழ் வயலில் நீ விளைத்த நெல் புதிது. விடுதலைக்காக நீ எடுத்த வில் புதிது! உன்னிடத்தில் பக்தி செலுத்தி வரும் பாட்டு கிறுக்கருக்கு உன் கவிதைகளெல்லாம் ஆண்டாளின் பாசுரங்கள் மாணிக்க வாசகங்கள்! தேசத்தை நேசிக்கும் திருத் தொண்டர்களுக்கெல்லாம் உன் பெயர் கூட ஒரு பெரிய புராணம் தான். உன்னிடத்தில் நான் காணாமற்போன பிறகுதான் இவர்கள் என்னைக் கண்டு கொண்டார்கள். காற்றுத் தேரேறி உன்னுடைய பாட்டு வாலிபம் பவனி வரும்போது எங்கள் காது ஜன்னல் அருகே கலவரம்... எட்டிப் பார்க்கும் - முன்னுரிமை இதயத்திற்கா கண்களுக்கா என்று! 173

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/173&oldid=817145" இலிருந்து மீள்விக்கப்பட்டது