பக்கம்:பாரதியம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதுரமான சக்க ரங்களாக இழுபட்டோம். எங்கள் அழைப்புக்கள் மறுப்புக்களாலேயே சந்திக்கப் பட்டன. எங்கள் குருட்டுச் சிறகுகள் திசைகளைத் தேடின. இவன் பாடல்கள் எங்களுக்குப் பாதை போட்டுத் தந்தன. சங்கப்பலகையைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு புருவம் நெரித்த பண்டிதர்கள்முன் இவன் மண்டியிட வில்லை. இவனைத் தமிழ் தழுவிக் கொண்டது. இவன் புல்லாங் குழலில் புகுந்த காற்று புனிதமடைந்தது. வேலிகள் இவனுக்குச் சிறகுகளாயின. இவன் தலையில் கங்கை இருந்தாலும் நெற்றிக் கண்ணில் நெருப்பும் இருந்தது. காந்தியின் காலத்தில் இருந்த இப்புலவன் ஆயுதம் செய்வோம் எனத் தற்காப்பும் பாடினான். 178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/178&oldid=817150" இலிருந்து மீள்விக்கப்பட்டது