பக்கம்:பாரதியம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடி முழக்கம் கேட்டாலும் விழிக்காத இந்தக் கும்பகர்ணர்களை - உன் புல்லாங்குழல் ஒலியா புரட்டி எழுப்பப் போகிறது? இந்தக் கோமா வியாதியிலிருந்து நாடு என்று குணமடையும் என்பதை இங்குள்ள டாக்டர்களால் நிர்ணயிக்க முடியவில்லை ஏனென்றால் - இந்த டாக்டர்களின் நாடித்துடிப்பே சரியாக இல்லை! இங்கு கங்கைநதி பாய்ந்தாலும் காவிரி நடந்தாலும் கோதாவரி, கிருஷ்ணா கும்மாளமிட்டாலும் வியர்வை நதி பாயாமல் - மக்களுக்கு விமோசனமே கிடைக்காது இங்கு ஜாதி நெருப்பில் சேரிகள் எரியும் போது தலைவர்கள் குளிர்காய்கின்றார்கள் தொண்டர்கள் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்! இங்கு வெந்து தணிவது காடல்ல மனித உடல்கள் நூல் அறுந்து தடுமாறும் பட்டம் போல நம்பிக்கை நூலறுந்த 191

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/191&oldid=817165" இலிருந்து மீள்விக்கப்பட்டது