இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அப்போதுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வாலியச் சுவாசம் தீண்டிய சிலிர்ப்பில் கவிதையின் கர்ப்பப்பை மெல்லக் கண் விழித்தது... அந்தப் பாரதிக் கவிஞனையும் நான பரிசீலனை செய்கிறேன்... பூணுால் காரன் எனபதால அவனை நாம் புறக்கணித்து விடலாமா? முடியாது. அவன வெண்மணிகளுக்கும் விழுப்புரங்களுக்கும் உறங்கி விட்டு மீனாட்சி புரங்களுக்காக மட்டுமே விழித்துக் கொள்கிற பூணுரல் காரணல்லன். அவன் ஒரு அக்ரஹாரத்து அரிஜனன். 195