பக்கம்:பாரதியம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறுமை அம்புகள் அவனது சட்டைகளிலும் தைத்துக் கிடந்தன... ஆயினும் கொள்கைப் போர்க்களத்தில் கடைசிவரைக்கும் அந்தப் பாவி வீழ்த்தப்பட முடியாத வீரனாகவே நின்றான். நெருப்பில் நடந்தபடி வசந்தங்களைக் கனவு கண்ட அவனது கண்ணிரில் ஆயிரங்கோடி தலைமுறைகளுக்கான கஞ்சிக்கு உப்பு இருந்தது. இருக்கிறது... அதனால்தான் சொல்கிறேன்... அவன்... அவனே... என்வழி காட்டி 199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/199&oldid=817173" இலிருந்து மீள்விக்கப்பட்டது